என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 449 கனஅடியாக அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 449 கனஅடியாக அதிகரிப்பு

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
    • தற்போது அணையின் நீர்மட்டம் 106.98 அடியாக உள்ளது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரம் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு தண்ணீர் தேவை குறைந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரத்து 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 449 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 106.98 அடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 74.18 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×