என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: இரண்டு நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
    X

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது: இரண்டு நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

    • 12 செ. மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த மாதம் இயல்புக்கு அதிகமாகவே 23 செ.மீ.அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.

    அதே நேரத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பருவமழையில் தொய்வு நிலவியது. இந்த நிலையில் நாளை (15-ந் தேதி இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

    இது படிப்படியாக தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடங்கும் மழை 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

    இதன் மூலம் வருகிற 20-ந்தேதி வரையில் அடுத்த சுற்று மழையை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 17, 18-ந்தேதிகளில் பரவலாக கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 செ. மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்கக் கடல் பகுதியில் உருவாக உள்ளது. இதில் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

    வருகிற 21-ந்தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். பின்னர் இந்த மாத இறுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் தென்படுகிறது.

    இருப்பினும் முதல் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளும் தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுக்கும். 25-ந்தேதிக்கு பிறகு உருவாகும் புயலும் மழையை கொடுக்கும். இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்குமா? காவிரி டெல்டா பகுதியில் கரையை கடக்குமா? என்பது அதன் நகர்வை பொறுத்து தெரிய வரும். இந்த புயலால் காற்று பாதிப்பு ஏற்படாது. மழை பொழிவே அதிகம் இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×