என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்- அனைத்துக் கட்சிக் கூட்டம் அறிவிப்பு
- மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
- சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வரும், 6.11.2025 அன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
முன்னதாக, கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்' என கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.






