என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது- அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
- தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்துள்ளது. தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணை பிரச்சனையில் மெத்தனப் போக்காக இருக்கிறது.
இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கபட்டு அவை விடுத்த ஆணையை கர்நாடகா அரசு இதுவரை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. அதோடு தற்பொழுது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேகதாது அணை கட்ட அனுமதித்தால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காமல் மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






