என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆடிக் கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே 5 நாட்கள் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!
    X

    ஆடிக் கிருத்திகை: அரக்கோணம்- திருத்தணி இடையே 5 நாட்கள் சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!

    • அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு EMU ரெயில் இயக்கப்படுகிறது.
    • ஒரு நாளைக்கு 4 முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    ஆடிக் கிருத்திகையை ஒட்டி அரக்கோணம்- திருத்தணி இடையே நாளை முதல் ஆகஸ்டு 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அரக்கோணம்- திருத்தணி- அரக்கோணம் என்ற அடிப்படையில சிறப்பு EMU ரெயில் இயக்கப்படுகிறது.

    காலை 10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும். திருத்தணிக்கு 10.40 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு 11.10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

    மதியம் 1 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 13.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். 13.30 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம் சென்றடையும்.

    மதியம் 2.50 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 15.10 மணிக்கு திருத்தணியை சென்றடையும். 15.20 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட்டு 15.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

    Next Story
    ×