என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்.. வானிலை ஆய்வு மையம் தகவல்
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்.
- சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி வரும். தற்போது தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. புதுவையில் இருந்து 420 கிலோமீட்டர், நாகையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது நவம்பர் 30 ஆம் தேதி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






