என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
- அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
சென்னை அருகே வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடலூரில் இருந்து 150 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 130 கி.மீ., நெல்லூருக்கு 180 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story






