என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டிட்வா புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்
    X

    'டிட்வா' புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்

    • டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளது
    • டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டிட்வா புயல் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    மேலும், டிட்வா புயலின் நகரும் வேகம் 7 கிலோ மீட்டரில் இருந்து 5 கிலோ மீட்டராக குறைந்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×