என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு - பிரதீப் ஜான் கணிப்பு
    X

    ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு - பிரதீப் ஜான் கணிப்பு

    • சென்னையை நோக்கி மழைமேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
    • புயல் கடலில் இருக்கும்வரை திடீரென மழை மேகங்களை நிலத்தை நோக்கி தள்ளும்.

    ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், சென்னையை நோக்கி மழைமேகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. புயல் கடலில் இருக்கும்வரை திடீரென மழை மேகங்களை நிலத்தை நோக்கி தள்ளும். குறிப்பாக புயல் கரையை கடக்கும் நிகழ்வு இன்று நடைபெறாமல் நாளை கரையை கடக்கும்" என கூறியுள்ளார்.

    Next Story
    ×