என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டிட்வா புயல்: இலங்கை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து
    X

    டிட்வா புயல்: இலங்கை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து

    • டிட்வா புயலால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விமானங்கள் ரத்து.
    • உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னையில் இருந்து ஜாப்னா, கொழும்பு, இலங்கையில் இருந்து சென்னை வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    டிட்வா புயலால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் இலங்கை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும்,காற்றின் வேகம், மழையின் தீவிரத்தை பொறுத்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×