இன்று நடைபெற இருந்த சென்னை மற்றும் அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த சென்னை மற்றும் அழகப்பா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை, நாகை, புதுச்சேரி அருகே உள்ளதால் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மழை தொடர்ந்த நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடத்தப்படும் மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அழகப்பா பல்கலைக்கழ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற இருந்த டிப்ளோமா தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com