என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR படிவங்களை பூர்த்தி செய்வதற்கு BLO-க்களே திணறுகின்றனர் - தி.மு.க. சட்டத்துறை செயலாளர்
- பா.ஜ.க. தேர்வு செய்த தேர்தல் ஆணையம் தான் தற்போது SIR-ஐ நடைமுறைப்படுத்தி வருகிறது.
- லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம் உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சட்டத்துறை செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.
* பாகநிலை முகவர், நாளொன்றுக்கு 50 படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க முடியும்.
* தி.மு.க.வினருக்கு மட்டுமே கணக்கீட்டுப் படிவங்கள் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறு.
* பா.ஜ.க.வுக்கு சாமரம் வீச வேண்டும் என்பதற்காக மட்டுமே அ.தி.மு.க.வினர் SIR நடவடிக்கைக்கு ஆதரவளிக்கின்றனர்.
* படிவங்களை பூர்த்தி செய்வதற்கு BLOக்களே திணறும் நிலையில் உள்ளனர்.
* வாக்காளர் பட்டியலை முறைப்படுத்துமாறு 2004 முதல் தற்போது வரை தி.மு.க. தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
* பா.ஜ.க. தேர்வு செய்த தேர்தல் ஆணையம் தான் தற்போது SIR-ஐ நடைமுறைப்படுத்தி வருகிறது.
* முறையான வாக்காளர் பட்டியல் தேவை என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
* ஒருநாள் நடைபெறும் தேர்தலுக்கு பார்த்து பார்த்து தேதி குறிக்கப்படுகிறது.
* SIR-ஐ ஒரு மாத காலத்தில் முடிக்க வேண்டும் எனக்கூறுவது எப்படி நியாயம்?
* வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணி.
* பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பருக்குள் கணினிமயமாக்குவது சாத்தியமில்லை.
* லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






