என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழை குறைந்து நீர்வரத்து சீரானது- குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
- மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
- சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று காலை முதல் மாலை வரையில் புலியருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மழை குறைந்ததால் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.






