என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்- அன்புமணி
    X

    மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்- அன்புமணி

    • இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
    • சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக போக்குவரத்து தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான தொழில்நுட்ப பணியாளர்கள் நியமனம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதில், இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என்பதும், கொத்தடிமைகளைப் போல குறைந்த ஊதியத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு துணைபோவது கண்டிக்கத்தக்கது.

    மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி, நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×