search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது
    X

    பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது

    • தனது காதலியை அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார்.
    • வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கோவக்காபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(22). இவர் நாகையகோட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தபோது தன்னுடன் படித்துவந்த 19 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கவே காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்துச்சென்றார்.

    பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விபரம் அஜித்குமாரின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கும் தடைவிதித்தனர். இதனையும் மீறி கடந்த 18.8.2023-ம் தேதி தனது காதலியை அஜித்குமார் திருமணம் செய்து கொண்டார்.

    அவர் கருவுற்றிருந்தநிலையில் அவருக்கே தெரியாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளனர். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் நடந்த விபரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நியாயம் கேட்டபோது அவரது ஜாதியை சொல்லி திட்டி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குபதிவு செய்து பெண்ணை ஏமாற்றிய கணவர் அஜித்குமார், தாய் பரமேஸ்வரி, பாட்டி வெள்ளையம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×