என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பள்ளி வளாகத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை: உடலை மீட்டு போலீசார் விசாரணை
- இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
- கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்காக பள்ளி வளாகத்தில் தகர செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த செட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து பள்ளி மாணவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
உடனே இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கட்டிடப்பணியில் ஈடுபட வந்த பெண்ணா அல்லது மர்மநபர்கள் வேறு எங்காவது இளம்பெண்ணை கற்பழித்து கொன்று இங்கு வந்து போட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரில் மாயமான பெண்களின் விவரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்