search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாய் வீட்டு சீர் போன்று உள்ளது..!: ஆயிரம் ரூபாய் பெற்ற பெண்கள் மகிழ்ச்சி
    X

    தாய் வீட்டு சீர் போன்று உள்ளது..!: ஆயிரம் ரூபாய் பெற்ற பெண்கள் மகிழ்ச்சி

    • பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை
    • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள்- ஈரோடு பெண்

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். ஆனால், தகுதியுடையவர்களுக்கு நேற்றில் இருந்து வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது.

    பணம் கிடைத்த பெண்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டைத் சேர்ந்த வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் 1000 ரூபாய் கிடைக்கப் பெற்றது குறித்து கூறியதாவது:-

    ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரெம்ப மகிழ்ச்சி. முதலமைச்சர் பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை. முதலமைச்சர் கொடுப்பது தாய் வீட்டு சீர் போன்று உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி, வாழ்த்துக்கள். ஹேப்பி முதலமைச்சர் சார்... என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

    டெய்லர் வேலை பார்க்கும் பெண் கூறுகையில் ''இந்த பணத்தை செல்வ மகள் திட்டத்திற்கு பயன்படுத்துவேன். இதை நான் செலவு செய்ய மாட்டேன்'' என்றார்.

    வேலூரை சேர்ந்த பெண்கள் ''ஆயிரம் ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சி. இரண்டு வருடத்திற்கு முன்பாக இதை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இதை வைத்து மளிகை பொருட்கள், ஆஸ்பத்திரி செலவை சமாளிக்கலாம்'' என்றனர்.

    சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் பெண் ஒருவர் ''சிலிண்டர் வாங்குவதற்கு, சொந்த செலவிற்கு, மருத்துவ செலவு ஏற்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

    மற்றொரு பெண் ''எனது கணவர், கால் முறிந்து வேலைக்கு போகாமல் உள்ளார். நானும் காலில் அடிப்பட்டு வேலைக்கு செல்லவில்லை. இந்த நேரத்தில் இந்த பணம் உதவியாக இருக்கும். முதல்வருக்கு நன்றி. இவ்வளவுதான் எனக்கு பேசத்தெரியும்'' என்றார்.

    Next Story
    ×