search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் மனைவியை எரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: சேலம் கோர்ட்டு தீர்ப்பு
    X

    காதல் மனைவியை எரித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: சேலம் கோர்ட்டு தீர்ப்பு

    • கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார்.
    • குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவரும், தீவட்டிபட்டியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப செலவுக்கு கவுசல்யா கணவர் குமாரிடம் பணம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், கவுசல்யாவை மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவுசல்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை வழக்கு சேலம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு வழங்கினார். அதில் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    Next Story
    ×