search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக வடமலை பதவி ஏற்றார்
    X

    சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக வடமலை பதவி ஏற்றார்

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது.
    • நீதிபதி வடமலையை வரவேற்று அட்வகேட் ஜெனரல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பி.வடமலை பொறுப்பேற்றார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    மாவட்ட நீதிபதியாக இருந்த பி.வடமலையை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து கடந்த 23-ந்தேதி ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி, அதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கூடுதல் நீதிபதியாக பி.வடமலைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இதன் மூலம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்தது. அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கை 75 ஆகும். நீதிபதி வடமலையை வரவேற்று அட்வகேட் ஜெனரல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், வக்கீல் சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர்.

    இதனையடுத்து ஏற்புரை வழங்கிய நீதிபதி பி.வடமலை, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×