என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை வந்தடைந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
    X

    சென்னை வந்தடைந்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

    • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். மாலையில் நடைபெற உள்ள விழாவில் கலைஞர் நாணயத்தை வெளியிட உள்ளார்.

    Next Story
    ×