என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஊட்டியில் 2 மணி நேரம் கொட்டிய மழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
- ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மழை தற்போதும் பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதம் பெய்த மழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல், நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
குறிப்பாக, ஊட்டியில் நேற்று 2 மணிக்கு பெய்த மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், கூட்செட் போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஊட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக காந்தல் கே. கே. நகர் தெருக்கள் மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் புகுந்த மழை நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்