search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து அனுமன் கற்சிலை மீட்பு- 2 பேர் கைது
    X

    1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து அனுமன் கற்சிலை மீட்பு- 2 பேர் கைது

    • கோவிலில் சிசிடிவி கேமரா காட்சிகளை அக்டோபர் 2019 தொடக்கத்தில் இருந்து பகுப்பாய்வு செய்தனர்.
    • திருவள்ளுவர் மாவட்டம் தும்பிக்குளம் சின்னத்தெரு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி:

    கும்பகோணத்தில் 1000 ஆண்டு பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பழங்கால அனுமன் சிலை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு சமீப காலமாக விசாரணை முடிக்கி விடப்பட்டது.

    இந்த நிலையில் கோவிலில் சிசிடிவி கேமரா காட்சிகளை அக்டோபர் 2019 தொடக்கத்தில் இருந்து பகுப்பாய்வு செய்தனர். அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய சில நபர்களின் காட்சிகளை கண்டறிந்து அவற்றை பதிவிறக்கம் செய்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவள்ளுவர் மாவட்டம் தும்பிக்குளம் சின்னத்தெரு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஒரு கூட்டாளியுடன் சேர்ந்து அந்த சிலையை வெளிநாட்டில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க முடிவு செய்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலகண்டன் வீட்டை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் கால நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்ட பழமையான அனுமன் சிலையை கண்டறிந்து கைப்பற்றினர். இதை அடுத்து மணிகண்டனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தீவிரமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி டாக்டர் ஜெயந்த் முரளி பாராட்டினார்.

    Next Story
    ×