என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடிகை திவ்யா விவகாரம்- அர்னவ் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்
    X

    அர்னவ் - திவ்யா

    நடிகை திவ்யா விவகாரம்- அர்னவ் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்

    • கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • திவ்யா அளித்த புகாரில் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சின்னத்திரை நடிகர் அர்னவ், சின்னத்திரை நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை திவ்யா பதிவிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையாலும், அர்னவ் தன்னுடன் நடிக்கும் மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி திவ்யா கூறிவரும் நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் சமூக வலைதளத்தில் இருவரும் பேசும் ஆடியோக்களும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

    தற்போது திவ்யா அளித்த புகாரில் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அரனவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் அனைத்து மகளிர் போலீசார் கூறி வந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து வரும் 14-ஆம் தேதி இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரனவிற்கு சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு அர்னவ் ஆஜரான பிறகு இந்த வழக்கின் முக்கிய நகர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×