என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பீர் பாட்டில்களுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி- பாட்டில்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்
    X

    பீர் பாட்டில்களுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி- பாட்டில்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்

    • லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து ரோட்டில் பீர் ஆறாக ஓடியது.
    • விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமானது.

    ஊத்துக்குளி:

    செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பீர் கம்பெனியிலிருந்து கோயம்புத்தூரில் உள்ள டாஸ்மார்க் குடோனிற்கு லாரியில் 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு கோவையை நோக்கி வந்தது.

    லாரியை பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவர் ஓட்டி வந்தார். லாரி இன்று காலை 8 மணி அளவில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை திருப்பூர் அடுத்த பள்ளக்கவுண்ட ன்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் ஓரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து ரோட்டில் பீர் ஆறாக ஓடியது. மேலும் இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் தங்களுக்கு தேவையான அளவு பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். இதனிடையே பின்னால் வந்த மற்றொரு லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களை அருகில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த விபத்தில் லாரியில் இருந்த ஏராளமான பீர் பாட்டில்கள் உடைந்து நாசமானது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×