search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவலர் வீர வணக்க நாள் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
    X

    காவலர் வீர வணக்க நாள் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி

    • 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.
    • வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    திருவள்ளூர்:

    ஆண்டு தோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

    அதே போல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியின் போது உயிர் நீத்த 188 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அஞ்சலியின் போது நினைவுத் தூணுக்கு ஆயுதப்படை துணைப் போலீஸ் சூப்பிரண்டு குமரன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து 63 குண்டுகள் முழங்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீரமரணம் அடைந்தவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார், ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×