search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போகிப்பண்டிகையன்று புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்துங்கள்- திருவள்ளூர் கலெக்டர் வேண்டுகோள்
    X

    போகிப்பண்டிகையன்று புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்துங்கள்- திருவள்ளூர் கலெக்டர் வேண்டுகோள்

    • போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.
    • புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    போகிப்பண்டிகையன்று பழைய சிந்தனைகளையும், செயல்களையும் தவிர்த்து, புதிய சிந்தனைகள் மற்றும் செயல்திட்டங்களை தொடங்க வேண்டும் என்ற நோக்கில், பழையன கழிதலும், புதியன புகுதலுமென நம் தமிழ் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இப்போகிப் பண்டிகை காலப்போக்கில் பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.

    இத்தகைய பழக்கம் பெரும் நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வேறுவிதமாக கடைபிடிக்கப்பட்டு, போகியன்று தங்களிடமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் பிற தேவையற்ற பொருட்களை எரிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்தகைய புகையினால் குறுகிய மற்றும் நீண்ட கால தீங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளன. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) போகித் திருநாளில், நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து புதிய சிந்தனைகளையும், செயல்திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி போகி மற்றும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×