என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவில் திருவிழாவில் தீமிதித்தபோது தவறி விழுந்ததில் தாத்தா - 1 வயது பேத்தி உடல் கருகினர்
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இரவு விமரிசையாக நடைபெற்றது.
- முதியவர் ராஜேசும், அவரது பேத்தியும் உடல் கருகி துடித்தனர்.
திருவள்ளூர்:
ஊத்துக்கோட்டை அடுத்த தராட்சி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் விழா கடந்த 21-தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இரவு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தீமிதித்தனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 50) என்ற முதியவர் அவரது 1 வயது பேத்தியுடன் தீயில் இறங்கினார். அவர் தீயில் ஓடியபோது திடீரென கால் தவறி பேத்தியுடன் தீக்குள் விழுந்தார்.
இதில் முதியவர் ராஜேசும், அவரது பேத்தியும் உடல் கருகி துடித்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீமிதி திருவிழாவில் பேத்தியுடன் முதியவர் தவறி விழுந்து உடல் கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






