search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஏத்தாப்பூர் அருகே 2 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி
    X

    ஏத்தாப்பூர் அருகே 2 வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி

    • சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
    • ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள எடப்பட்டி பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் நதியா.

    இவரது சகோதரி சத்யா (வயது 23). இவர் அரியலூர் மாவட்டம் செந்துறையில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2 குழந்தைகளை தனது சகோதரி நதியா வீட்டில் விட்டிருந்தார். அதில் 2½ வயது குழந்தை ஹரிகிருஷ்ணன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது தையல் மிஷினுக்கு வைத்திருந்த சுவிட்ச் பாக்ஸ் பிளக்கில் திடீரென கை வைத்தான். இதில் மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நதியா குழந்தையை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நதியா தனது சகோதரி சத்யாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சத்யா பதறியபடி விரைந்து வந்து தனது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×