search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நேற்று 1 ரூபாய்... இன்று 1000 ரூபாய்... மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்
    X

    நேற்று 1 ரூபாய்... இன்று 1000 ரூபாய்... மகிழ்ச்சியில் குடும்ப தலைவிகள்

    • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.
    • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு கடந்த இரு தினங்களாக ஒரு ரூபாய் மற்றும் மேசேஜ் அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் படிப்படியாக ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. திட்டம் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ள நிலையில் இன்று வங்கி கணக்கில் பணம் வந்ததால் குடும்ப தலைவிகள் ஹேப்பியோ... ஹேப்பி...

    Next Story
    ×