search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பேருந்து இயக்கம்
    X

    4 மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பேருந்து இயக்கம்

    • கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    சென்னை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை பெய்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இதையடுத்து சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×