search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொந்த கட்சிக்காரர்களே இப்படியென்றால்...? செல்வ பெருந்தகை குமுறல்
    X

    சொந்த கட்சிக்காரர்களே இப்படியென்றால்...? செல்வ பெருந்தகை குமுறல்

    • அரசியலில் அவர் வழி தனி. என் வழி தனி.
    • எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வ பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து காங்கிரசிலும் உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பவர். காங்கிரசுக்குள் எதிர்ப்புகளை சமாளித்து வளர்வது சாமானியமல்ல.

    இப்போதும் மாநில தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டதும் அவருக்கு அந்த பொறுப்பை வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    அதே நேரம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி அவர் கூறும் போது, "எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் நட்பு வேறு. நட்பு ரீதியாக நாங்கள் பேசிக் கொள்வோம். அரசியலில் அவர் வழி தனி. என் வழி தனி.

    எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொறுப்புக்கும் வரும் போது இப்படித்தான் எதிர்ப்பு வரும். இது பழகிப் போனதுதான்.

    ஆனால் சொந்த கட்சிக்காரர்களே சொந்த கட்சிக்காரர்களை எதிர்ப்பதுதான் கஷ்டமாக உள்ளது. எல்லோரும் செயல்படுங்கள். தேவைகளை கட்சி தலைமையிடம் கேளுங்கள். அதற்கு உரிமை இருக்கிறது.

    ராஜீவை பற்றி, ராகுலை பற்றி சீமான் விமர்சித்தபோது காங்கிரஸ்காரர்கள் எதிர்த்து குரல் கொடுக்க முன்வர வில்லை. ஆனால் சொந்தக் கட்சி காரர்களுக்கு எதிராக குரல் கொடுக்க மட்டும் நான் முந்தி... நீ முந்தி என்று வந்து விடுகிறார்கள். இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?" என்றார்.

    Next Story
    ×