search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனா பரவலை தடுக்க வேலூரில் இன்று முதல் முக கவசம் கட்டாயம்
    X

    கொரோனா பரவலை தடுக்க வேலூரில் இன்று முதல் முக கவசம் கட்டாயம்

    • முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    • நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கை சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது.

    நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும்.

    பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்திடல்வேண்டும். இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

    அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதால்

    கொரோனா நோய்தொற்று ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைவலி, நாவில் ருசி தெரியாமல் இருந்தால் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவரை அணுகிட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    Next Story
    ×