search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி அருகே ஜவுளி வியாபாரி அடித்துக்கொலை: முன்விரோதத்தில் தொழிலாளி வெறிச்செயல்
    X

    தூத்துக்குடி அருகே ஜவுளி வியாபாரி அடித்துக்கொலை: முன்விரோதத்தில் தொழிலாளி வெறிச்செயல்

    • கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார்.
    • ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் லட்சுமனன் மகன் அழகர் (வயது 38). இவர் ரெடிமேட் ஆடைகள் விற்பனை தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (43). இவர் புதியம்புத்தூரில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் காமராஜ் நகரில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு முருகேசன் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே முருகேசன் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×