search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகா அரசை கண்டித்து திருமானூரில் 10-ந்தேதி த.மா.கா. ஆர்ப்பாட்டம்
    X

    கர்நாடகா அரசை கண்டித்து திருமானூரில் 10-ந்தேதி த.மா.கா. ஆர்ப்பாட்டம்

    • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசுக்கு கண்டனம்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    த.மா.கா. சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து, வருகிற 10-ந்தேதி மாலை 3 மணியளவில் தமிழ் மாநில காங்கிரஸ், டெல்டா மாவட்டங்களின் சார்பாக அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், டெல்டா மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில துணை அமைப்புத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், விவசாய அணியின் சார்பாக டெல்டா மாவட்ட மாநில, மாவட்ட, தலைவர்கள், நிர்வாகிகள், கலந்துகொள்கிறார்கள்.

    காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும், பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×