search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களை தேடி திட்டம்: மேயர் பிரியா 5-ந்தேதி அடையாறில் குறை கேட்கிறார்- பொதுமக்கள் நேரில் மனு கொடுக்கலாம்
    X

    மக்களை தேடி திட்டம்: மேயர் பிரியா 5-ந்தேதி அடையாறில் குறை கேட்கிறார்- பொதுமக்கள் நேரில் மனு கொடுக்கலாம்

    • மேயர் ஆர்.பிரியா மண்டலம்-13க்குட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
    • கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட எல்.பி. சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் ஆர்.பிரியா மண்டலம்-13க்குட்பட்ட பொது மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

    எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-13க்குட்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடைந்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Next Story
    ×