என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள்
    X

    காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள்

    • அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    அரசு பஸ்களில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பயணம் அதிகமாக உள்ளது.

    அதே போல புறநகரங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் அதிகளவில் பயணிக்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, தாம்பரம், கோயம்பேடுக்கு 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, விழுப்புரத்திற்கு 40 சிறப்பு பஸ்களும் கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 சிறப்பு பஸ்களும் மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×