search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலாஷேத்ரா மாணவிகள் ஆன்லைனில் புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு
    X

    கலாஷேத்ரா மாணவிகள் ஆன்லைனில் புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடு

    • பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிகளிடம் இருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • பாலியல் துன்புறுத்தல் குறித்து கலாஷேத்ரா மாணவிகள் புகார் தெரிவிக்க https://reachoutsupport.co.in இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் சிலர் பேராசிரியர், ஊழியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் ஹரிபத்மன் உள்பட 4 பேரை கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்தது. மேலும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

    இந்த நிலையில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவிகளிடம் இருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கலாஷேத்ரா மாணவிகள் புகார் தெரிவிக்க https://reachoutsupport.co.in இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.

    கலாஷேத்ரா நிர்வாகம் அதனுடைய இணையதளத்தில் இதனை வெளியிட்டுள்ளது. நிர்வாகம் அமைத்த 3 பேர் கொண்ட விசாரணை குழுவின் தலைவர் நீதிபதி கண்ணன், மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்களை யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் கல்லூரி நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் புகார் அளிக்கலாம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×