என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மானாமதுரை அருகே சொத்து பிரச்சினையில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
- தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த அய்யங்காளை அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
- சொத்து தகராறில் தந்தையை மகன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி (வயது 60). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மூத்த மகன் அய்யங்காளை, கூலித்தொழிலாளி. சொத்து பிரிப்பதில் இவருக்கும், தந்தை பழனியாண்டிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று இரவும் இது தொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த அய்யங்காளை அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று அதிகாலை வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பழனியாண்டியை, மகன் அய்யங்காளை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் பழனியாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யங்காளையை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்