என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆன்லைனில் பீரோ விற்க முயன்ற தாய்-மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி
- பழைய பீரோ ஒன்றை ஆன்லைனில் விற்க முயன்ற தாய், மகளிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தை சேர்ந்த தாய், மகள் தங்கள் பழைய பீரோ ஒன்றை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தனர். அதன் விலை ரூ.6 ஆயிரம் ஆகும்.
இந்த விளம்பரத்தை பார்த்து ஒரு வடமாநில வாலிபர் அந்த பெண்ணிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் உங்கள் பீரோவை வாங்கிக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து கூகுள் பே மூலம் உங்களுக்கு பணம் அனுப்பி விடுகிறேன் என்று கூறி முதலில் அந்த நபர் கியூ ஆர் கோர்டை அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.
அந்த பெண்ணை முதலில் ஒரு ரூபாய் போட சொல்லியுள்ளார். பின்னர் அந்த நபர் 2 ரூபாய் போட்டு உள்ளார். பின்னர் அந்த பெண் 100 ரூபாய் அனுப்பி உள்ளார். அந்த நபர் ரூ.200 அனுப்பி உள்ளார்.
பின்னர் அந்த பெண் 6000 ரூபாய் அனுப்பி உள்ளார். அந்த நபர் ரூ.12000 அனுப்ப வேண்டும். ஆனால் அந்த நபர் அனுப்பவில்லை. இது குறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது பணம் அனுப்புவதில் ஏதோ பிரச்சனை உள்ளது. உங்கள் செல்போன் எண்ணிற்கு ஒரு ஓ.டி.பி. வரும் அந்த நம்பரை பார்த்து கொஞ்சம் கூறுங்கள் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பி அந்த பெண் 243869 என்ற ஓ.டி.பி. எண்ணை கூறியுள்ளார். அடுத்த நிமிடமே அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 43 ஆயிரத்து 869 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அந்த பெண் அந்த நபரிடம் கேட்டபோது ஒன்றும் பிரச்சனை இல்லை பணம் திரும்பவும் வந்துவிடும். உங்கள் செல்போன் எண்ணிற்கு தற்போது ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்துள்ளது அதை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணும் 485000 என்ற நம்பரை கூறியுள்ளார். அடுத்த நிமிடம் அவரது வங்கி கணக்கிலிருந்து 4 லட்சத்து 85 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக வந்தது. இவ்வாறாக அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண் அந்த நபரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்