search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்ம மரணம்- நண்பர்களிடம் போலீஸ் விசாரணை
    X

    திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்ம மரணம்- நண்பர்களிடம் போலீஸ் விசாரணை

    • பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன்மலை கீழ்நாடு பஞ்சாயத்து மேல்பூண்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது திருமணத்திற்காக நேற்று முன்தினம் இரவு நண்பர்களான அய்யனார், ராமர், ஆண்டி, பிரசாந்த், குமார் ஆகிய 5 பேரும் மாப்பிள்ளை தோழனாக சென்றுள்ளனர்.

    அப்போது 5 பேரும் மது குடித்துள்ளனர். இதனிடையே மாப்பிள்ளை வீட்டார் திருமண செலவுக்காக மாப்பிள்ளை தோழர்களுக்கு பணம் கொடுத்ததாக தெரிகிறது.

    இந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் மது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் அய்யனார் என்பவர் மயக்கமடைந்து உள்ளார். இதையடுத்து அய்யனாரை நண்பர்கள் சேர்ந்து அதே பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே வீட்டில் மயங்கி கிடந்த அய்யனாரை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யனார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

    மேலும் இதுகுறித்து கரியகோவில் போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் கருமந்துறை இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அய்யனாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணத்திற்கு சென்ற வாலிபர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×