என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாலை வசதி இல்லாத கிராமங்களில் குதிரைகளில் செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள்
    X

    சாலை வசதி இல்லாத கிராமங்களில் குதிரைகளில் செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள்

    • இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாது என்பதால் இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
    • ஒருசில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது முழுமையாக கிடைப்பதில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு மலை கிராமங்களில் தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியவை குதிரை, கழுதைகள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது.

    தேனி மாவட்டம் போடி குரங்கனி செல்லும் சாலையில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. காரிப்பட்டி மற்றும் ராசிமலை கிராமம். கேரளாவுக்கு நிகராக இப்பகுதியில் ஏலக்காய், காப்பி, மிளகு போன்ற பணப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி கிடையாது. இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாது என்பதால் இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் அனைத்தும் குதிரை மற்றும் கழுதைகள் மூலமாகவும், தலைச்சுமையாகவும் கொண்டு செல்லப்படுகிறது.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மேம்பட்டு வரும் நிலையில் நிலவில் சந்திராயன் தரையிறங்கிய நிலையிலும் கூட இதுபோன்ற மலை கிராமங்கள் இன்னும் தமிழகத்தில் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கக்கூடிய பெரும்பாலான பகுதிகளில் மின்சார வசதி கிடையாது. ஒருசில இடங்களில் சோலார் மின்வசதி செய்யப்பட்டிருந்தாலும் அது முழுமையாக கிடைப்பதில்லை.

    தற்போது இந்த கிராமங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன. இந்த கிராமங்களுக்கு முதல்நாளே குதிரைகளை தயார்படுத்தி எடுத்துச்செல்ல வேண்டும். அதேபோல தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் முதல்நாளே அங்கு சென்று இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் இதுபோன்ற சிரமத்தை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சந்தித்து வருகின்றனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமங்களான அடுக்கம், வெள்ளக்கவி உள்ளிட்ட பல கிராமங்களிலும் சாலைவசதி இல்லாததால் தற்போது வரை குதிரைகள் மூலமே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

    தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சியினரிடம் மலைகிராம மக்கள் தங்களது அடிப்படை பிரச்சனையான சாலை, குடிநீர் வசதிகளையாவது செய்து தரவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×