search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குறைந்த காற்றழுத்தம் 10, 11-ந் தேதிகளில் தமிழக கடலோரம் நோக்கி நகரும்- சென்னைக்கு அதிகமழை கிடைக்க வாய்ப்பு
    X

    குறைந்த காற்றழுத்தம் 10, 11-ந் தேதிகளில் தமிழக கடலோரம் நோக்கி நகரும்- சென்னைக்கு அதிகமழை கிடைக்க வாய்ப்பு

    • புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 10-ந்தேதி வியாழக்கிழமை மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அது தமிழக கடலோரத்தின் அருகே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அது வலுப்பெறும் தன்மையை பொறுத்து தான் அது புயலாக மாறுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.

    புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 10-ந்தேதி வியாழக்கிழமை மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அது தமிழக கடலோரத்தின் அருகே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அது வலுவடைவதைப் பொறுத்தும் மற்றும் நகரும் திசையை பொறுத்தும் அது தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பொழிவை கொடுக்கும் என்பது தெரிய வரும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்துள்ள நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அடுத்த வாரம் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் அடுத்த வார இறுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பெரும்பாலான வானிலை ஆய்வாளர்கள் அடுத்த வாரம் சென்னையில் மழை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×