என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புத்தாண்டு கொண்டாட்டம்- ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு
    X

    புத்தாண்டு கொண்டாட்டம்- ரூ.400 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு

    • ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும், அடுத்த 2 வாரத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது.
    • பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன.

    இந்த மதுக்கடைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையில் மது விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை 2 மடங்கை தாண்டுகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகை காலங்களில் மது பிரியர்கள் குடித்து கும்மாளமிடுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

    அந்த வகையில் வருகிற புத்தாண்டு தினத்தன்றும் குடிமகன்கள் மது விருந்து மற்றும் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

    கடந்த பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் 3 நாட்களில் ரூ.675 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருந்தது. தற்போது ஆங்கில புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை உள்ளது.

    வார இறுதி நாட்களில் புத்தாண்டு தினம் வருவதால் அதையொட்டி 2 நாட்கள் மதுவிற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்களிலும் சேர்த்து ரூ.300-ல் இருந்து ரூ.400 கோடி வரையில் மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குறைந்த விலை மதுவில் தொடங்கி நடுத்தர மற்றும் விலை உயர்ந்த மதுபானங்கள் என அனைத்துவிதமான சரக்கு வகைகளும் டாஸ்மாக் கடைகளில் தாராளமாக கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தினசரி இருக்கும் மதுபானங்களின் அளவை விட 3 மடங்கு கூடுதலாக மதுபானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தால் போலீசாரை பாதுகாப்புக்காக உடனடியாக அழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும், அடுத்த 2 வாரத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டியும் கூடுதல் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×