search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தாண்டு கொண்டாட்டம்... கடும் கட்டுப்பாடு விதித்த போலீசார்
    X

    புத்தாண்டு கொண்டாட்டம்... கடும் கட்டுப்பாடு விதித்த போலீசார்

    • பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * இன்று இரவு 7 மணி முதல் கடற்கரை உட்புற சாலை முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.

    * பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலை மூடப்படுகிறது.

    * மெரினா கடற்கரைக்கு செல்ல விரும்புவோர், சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    * போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர்.


    * மாலை 6 மணிக்கு மேல் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    * வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    * கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்தால் உடனடியாக புகார் அளிக்க ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×