search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் கொசுத் தொல்லை அதிகரிப்பு
    X

    சென்னையில் கொசுத் தொல்லை அதிகரிப்பு

    • திறந்தவெளி கொசு பிரச்சினையை தீர்க்க அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
    • மாநகராட்சி அதிகாரிகளும் கொசுவை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளன.

    தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. பல காலி மனைகளில் இன்னும் தண்ணீர் தேங்கியே இருக்கிறது. மேலும் காலி மனைகள் குப்பை மேடாக இருப்பதால் கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளன.

    கொசு தொல்லை அதிகரிப்பால் இரவில் தூங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    மாலை நேரம், இரவு நேரங்களில் கொசுக்களால் தங்களது குழந்தைகளுக்கு டைபாய்டு மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படக்கூடும் என்று பல பெற்றோர்கள் பயப்படுகி றார்கள்.

    திறந்தவெளி கொசு பிரச்சினையை தீர்க்க அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளும் கொசுவை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொசு உற்பத்திக்கு இடமளிக்கும் குடியிருப்பாளர்களிடம் அபராதம் வசூலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×