search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
    X

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    • பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
    • பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது.

    கிளாம்பாக்கம்:

    கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் இவ்வழித்தடத்தில் வந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் பேருந்து முனையத்தில் பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும் பேருந்து முனையத்தில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

    Next Story
    ×