என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆவின் நிறுவனத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை- அமைச்சர் மனோ தங்கராஜ்
- ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும்.
- ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
ஊட்டியில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், தருவூல ஜெர்சி காளை பண்ணையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு அப்புக்கோடு பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள முதன்மை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 8 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் ரூ.11.36 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் வழங்கினார்.
பின்னர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஆவினுக்கு சொந்தமான கருவூட்டல் பொலிகாளை பண்ணையில் சிறந்த மரபுத்திறன் உடைய ஜெர்சி, ப்ரீசியன் வகையை சேர்ந்த 157 கால்நடைககள் சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த காளைகளிடம் இருந்து உறைவிந்து சேகரிக்கப்பட்டு, மாநில அளவில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு உள்ள கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் உள்ளூர் பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்க முடியும். கால்நடைகளின் ஒட்டுமொத்த தரமும் உயரும். இதன்மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
தமிழகத்தில் ஒட்டுமொத்த தினசரி பால் உற்பத்தி 27 லட்சம் லிட்டராக இருந்தது. அது தற்போது 31 லட்சம் லிட்டராக உள்ளது. தமிழகத்தின் தினசரி பால் உற்பத்தியை 45 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மாநில அளவில் 70 லட்சம் லிட்டர் பாலை கையாள தேவையான அடிப்படை வசதிகளை, ஆவின் நிர்வாகம் நடப்பாண்டு இறுதிக்குள் கொண்டு வரும்.
ஊட்டியில் ஒருசில கட்டமைப்புகளை மாற்றி பால் கொள்முதலை வேகப்படுத்த வேண்டும். சுற்றுலா பிரதேசம் என்பதால் இலக்கு நிர்ணயித்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்களில் இனிப்பு சுவையை மேலும் கூட்ட ஆராய்ச்சிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளிக்கு சிறப்பு இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஆவின் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஆவின் பால் கூடுதலாக விற்கப்படுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்