search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாட்டின் பெயரை எப்படி மாற்றினாலும்  மத்திய பா.ஜ.க. அரசை  ஒன்றிய அரசு என்று அழைப்போம்- கே.என். நேரு பேட்டி
    X

    நாட்டின் பெயரை எப்படி மாற்றினாலும் மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று அழைப்போம்- கே.என். நேரு பேட்டி

      கோவை:

      நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

      அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.

      நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்து ள்ளார்கள்.

      பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.

      ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

      Next Story
      ×