search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய பூரணம் அம்மாள் அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!
    X

    1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய பூரணம் அம்மாள் அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!

    • மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.
    • ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

    "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

    ஆலயம் பதினாயிரம் நாட்டல்

    அன்னயாவினும் புண்ணியம் கோடி

    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கௌரவிக்கப்பட உள்ளார்கள் என கூறியுள்ளார்.

    Next Story
    ×