search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்காக எனது இல்ல கதவு திறந்தே இருக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்காக எனது இல்ல கதவு திறந்தே இருக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    • ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம்.
    • எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சென்னையில் நாளை போராட்டம் நடத்த உள்ளது.

    இந்த சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை காத்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு சங்க நிர்வாகிகள் யாரும் வரவில்லை.

    இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒவ்வொரு சங்கத்துக்கும் போன் செய்து அழைத்திருந்தோம். அவர்களும் என்னிடம் காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக நேற்று தெரிவித்து இருந்தனர்.

    நான் இன்று காலை 8 மணியில் இருந்து எனது வீட்டில் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. பரவாயில்லை. அவர்களுக்குள்ளே ஒரு சில முரண்பாடுகள் இருக்கிறது. அப்போதும் கூட நான் எல்லோரும் பேசி ஒருமித்த கருத்தோடு என்னை பார்க்க வாருங்கள் என்றேன். உங்களுக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.

    அதன்படி வீட்டில் 8 மணியில் இருந்து காத்திருந்தேன். 9 மணி வரை வரவில்லை. அதன் பிறகு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். இதன் பிறகு மறுபடியும் 10 மணியில் இருந்து எனது வீட்டுக்கு சென்று ஆசிரியர்களுக்காக காத்திருந்தேன்.

    இன்று நாள் முழுவதும் காத்திருக்கிறேன். அவர்களுக்காக எனது இல்லத்தின் கதவுகள் திறந்தே இருக்கும். எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் வந்து தங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்லலாம். பேச்சுவார்த்தைக்காக அவர்களை மீண்டும் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×